Header image alt text

நாட்டில் தற்போது அமுலில் உள்ள அவசர காலச் சட்டம் மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவினால் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த உயிர்த்த ஞாயிறன்று, நாட்டில் வெவ்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலையடுத்து அவசர காலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில், 344 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இவர்களில், 156 குடும்பங்களில் ஒருவர் அல்லது ஒன்றுக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 188 குடும்பங்களில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனரெனவும், அமைச்சரவையில் சமர்பித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மினுவாங்கொடை நகர சபையின் அதிகாரத்துக்குட்பட்ட பிரதேசங்களில், புர்கா, நிக்காப் என்பவற்றை அணிவதற்கு, முற்றிலும் தடை விதித்து, மினுவாங்கொடை நகர சபையில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

நகர சபைத் தலைவர் நீல் ஜயசேகர தலைமையில் இது தொடர்பான விசேட கூட்டம் கூடியபோதே, நகர சபைத் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களால் மேற்கண்ட தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. Read more

தற்போதைய அரசாங்கம் ஜனாதிபதி தேர்தலை நடத்தாமலிருக்க தயாராகி வருவதாகவும், அவ்வாறு செயற்பட்டால் தாம் நீதிமன்றத்தை நாடத் தயாராக இருப்பதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பத்தரமுல்லை-நெலும் மாவத்தையில் அமைந்துள்ள தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பிலேயே, அவர் இதனைக் கூறினார்.

கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள வெல்லம்பிட்டி செப்பு தொழிற்சாலை பணியாளர்கள் 08 பேரையும் எதிர்வரும் 27ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

வெல்லம்பிட்டி காவற்துறையினர் கோரிக்கை விண்ணப்பம் முலம் மேற்கொண்ட கோரிக்கைக்கு அமைவாக கொழும்பு மேலதிக நீதவானால் இந்த அழைப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த செப்பு தொழிற்சாலை கொழும்பு சினமன் கிரான்ட் உணவகத்தில் தற்கொலை குண்டுத்தாக்குதலில் ஈடுபட்ட இன்சாப் அஹமட் ஈப்ராஹிமுக்கு சொந்தமானது. Read more

வவுனியா கந்தபுரம் பகுதியிலுள்ள தோட்ட காணியில் இருந்து வெடிக்காத நிலையில் கைக்குண்டுகளை மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கந்தபுரம் தோட்ட காணியில் நேற்றுமாலை நிலத்தை பண்படுத்தி தீ வைத்தபோது கைக்குண்டொன்று வெடித்துள்ளது. அப்பகுதியில் வெடிக்காத நிலையில் குண்டுகள் இருக்கலாம் என சந்தேகம் கொண்ட உரிமையாளர் இன்று வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் அப்பகுதியில் கைக்குண்டு ஒன்றினை அவதானித்துள்ளனர். Read more

வெல்லம்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிவந்த பிரதம பொலிஸ் பரிசோதகர் காமினி செனரத் ஹேவாவிதாரன, உடன் அமுலுக்கு வரும் வகையில் காலி பொலிஸ் பிரிவிற்கு இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

வெல்லம்பிட்டிய செப்புத் தொழிற்சாலையின் ஊழியர்கள் 32பேர் விணையில் விடுதலையானமை குறித்த விசாரணைகள் தொடர்பிலேயே வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. Read more

சமிக்ஞை கோளாறு காரணமாக பிரதான ரயில் மார்க்கத்தில் ரயில் போக்குவரத்தில் தாமதமேற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை அறிவித்துள்ளது.

களனிக்கும் தெமட்டகொடையிற்கும் இடைப்பட்ட ரயில் மார்க்கத்தில் ஏற்பட்ட சமிக்ஞை கோளாறு காரணமாகவே பிரதான ரயில் மார்க்கத்தில் ரயில் போக்குவரத்தில் தாமதமேற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை மேலும் தெரிவித்துள்ளது.

கல்முனை- மருதமுனைப் பிரதேசத்தில் தீவிரவாதச் செயற்பாடுகளுடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பெயரில் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட நபரிடமிருந்து, அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர், ஒசாமா பின்லேடனின் உருவப் படத்துடன் கூடிய போதனைப் புத்தகமொன்று மீட்கப்பட்டுள்ளது. அத்துடன் சந்தேகத்துக்கிடமான இறுவட்டுகள், ஆஐ ரக சிம் அட்டைகள் இரண்டுடனான அலைபேசி என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர். Read more