வவுனியா கந்தபுரம் பகுதியிலுள்ள தோட்ட காணியில் இருந்து வெடிக்காத நிலையில் கைக்குண்டுகளை மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கந்தபுரம் தோட்ட காணியில் நேற்றுமாலை நிலத்தை பண்படுத்தி தீ வைத்தபோது கைக்குண்டொன்று வெடித்துள்ளது. அப்பகுதியில் வெடிக்காத நிலையில் குண்டுகள் இருக்கலாம் என சந்தேகம் கொண்ட உரிமையாளர் இன்று வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் அப்பகுதியில் கைக்குண்டு ஒன்றினை அவதானித்துள்ளனர். இதையடுத்து அங்கு தேடுதல் மேற்கொண்டபோது குண்டுகள் இருப்பதாகவும் நீதிமன்ற அனுமதி பெற்று விஷேட அதிரடிப்படையினரின் உதவியுடன் அப்பகுதியில் அகழ்வு மேற்கொள்ளவிருப்பதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.