உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களுக்கு ஐ.எஸ் அமைப்பின் ‘சாத்தானின் தாய்’ வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த வெடிகுண்டுகள் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த நிபுணர்கள் உதவியுடன் இலங்கையிலேயே தயாரிக்கப்பட்டது எனத் தெரியவந்துள்ளது. இதனால் இந்தக் குண்டு வெடிப்பில் வெளிநாட்டு தொடர்பு இருப்பதை அரசாங்கம் உறுதி செய்துள்ளது. பாரிஸில் நடந்த 2015 தற்கொலை தாக்குதல், 2017இல் இங்கிலாந்தில் மன்செஸ்டர் அரினா தாக்குதல், இந்தோனேசியாவில் ஒரு வருடத்துக்கு முன்பு தேவாலயங்களில் தாக்குதல்களில் இவ்வகையான வெடிகுண்டுகளே பயன்படுத்தப்பட்டுள்ளன.