மட்டக்களப்பு, வெல்லாவெளி பகுதியில் பாலம் ஒன்றின் கீழிருந்து ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெல்லாவெளி, காக்காச்சிவெட்டையைச் சேர்ந்த 38வயதான கே. கரிகரன் என்னும் இரு பிள்ளைகளின் தந்தையே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் இன்று அதிகாலை வீட்டிலிருந்து சென்றிருந்த நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் உறவினர்களால் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த நபரின் தலைகளில் பலத்த காயங்கள் காணப்படுவதனால் இவரை கொலைசெய்து அங்கு கொண்டுவந்து போடப்பட்டிருக்கலாமென உறவினர்கள் சந்தேகிக்கின்றனர். சடலத்தினை மீட்டுள்ள வெல்லாவெளி பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.