சட்டவிரோதமான முறையில் நாட்டில் இருந்து வெளிநாட்டிற்கு குடிபெயர முயற்சித்த 41 பேர் கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கைக்கு தெற்கு ஆழ் கடற்பரப்பில் 715 கடல் மைல் தொலைவில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 35 ஆண்களும் 06 பெண்களும் உள்ளடங்குவதாக கடற்படை கூறியுள்ளது. 18 இற்கும் 50 இற்கும் இடைப்பட்ட வயதினரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்கள் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா நோக்கி செல்ல முற்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.