கெக்கிராவ பிரதேசத்தில் நடத்தப்பட்டுவந்த முன்பள்ளி பாடசாலை கட்டடமொன்றின் அறையொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, ஒரு தொகை வெடிபொருள்களுடன், தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்புடன் தொடர்புடைய, இருவர் இராணுவத்தினரால் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இருவரும் மடாடுகம பகுதியைச் சேர்ந்தவர்களென்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட சந்தேநகபர் ஒருவர் இக் கட்டடத்தின் பொறுப்பானவராகக் கடமையாற்றி வந்துள்ளதுடன், இந்தக் கட்டடத்திலிருந்து சீ4 ரக அதிசக்தி வாய்ந்த வெடிப்பொருள் 168 கிலோகிராம், மாக்கர் பேனைக்குள் வைக்கப்பட்டிருந்த பச்சை, மஞ்சள் நிற வயர்கள், டெட்டனேட்டர், தமிழ் மொழியில் அச்சிடப்பட்ட பிரிவினைவாத மத புத்தகங்கள் 5 என்பன இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இதேவேளை சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்த கெக்கிராவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.