தீவிரவாதிகளால் பொசன் போயாத்தினத்துக்கு முன்னர் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக தெரிவித்து, இரத்தினபுரி நகரில் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்த நபர் ஒருவர் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட நபர், இரத்தினபுரி- கெட்டலியன்பல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். இந்த விடயம் தொடர்பில், இரத்தினபுரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.