இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து நாரஹேன்பிட்டியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது, வீடொன்றிலிருந்து இராணுவத்தினர் பயன்படுத்தும் முகமூடிகள் நான்கும்,

வீட்டில் பயன்படுத்துவதற்குத் தடை செய்யப்பட்ட கத்திகள் பத்தும் மற்றும் இலத்திரனியல் கருவிகள் சிலவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அத்துடன் நாட்டில் ஆறு மாவட்டங்களில் இத்தகைய சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.