Header image alt text

மூதூர் கிளி­வெட்டி முத்­து­மா­ரி­யம்மன் ஆல­யத்தில் தமிழ் பெயரில் ஆலய குருக்­க­ளுக்கு உத­வி­யா­ள­ராகச் செயற்­பட்ட நபர் ஒருவர் சந்­தே­கத்தின் பேரில் மூதூர் பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

குறித்­த­நபர் ஆல­யத்­துக்கு வரும் பக்­தர்­க­ளுக்கு வழங்­கப்­படும் பஞ்­சா­மிர்­தத்தில் கருத்­தடை மாத்­தி­ரை­களை கலந்து கொடுத்­தாரா? என்று பக்­தர்கள் எழுப்­பிய சந்­தே­கத்­தை­ய­டுத்து அது தொடர்பில் ஆலய நிர்­வா­ச­பை­யி­னரை அழைத்து நேற்று மூதூர் பொலிஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டுள்­ளதாக தெரியவருகிறது. இச்சம்­பவம் தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, Read more

உயிர்த்த ஞாயிறு இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து இலங்கைக்கு சீன நாட்டவர்கள் சுற்றுலாவுக்கென விஜயம் செய்வதில் சீன அரசாங்கம் விதித்திருந்த தடையில் தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்த்தவ மத அலவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கும் இலங்கைக்கான சீன தூவருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்தையின் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான சுற்றுப்பயணத்தை தவிர்க்குமாறு சீனா ஆரம்பத்தில் அறிவித்திருந்தது. Read more

பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள வெல்லம்பிட்டிய செப்புத் தொழிற்சாலை ஊழியர்கள் 8 பேர் தொடர்பிலான விசாரணைகள் பொலிஸ் பயங்கரவாத தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதற்காக பல குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, குறித்த சந்தேகநபர்களை நாளை (27ஆம் திகதி) மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த 8 சந்தேகநபர்கள் அடங்கலாக 9 பேரை பிணையில் விடுவிப்பதற்கு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் கடந்த 6ஆம் திகதி உத்தரவு பிறப்பித்திருந்தது. Read more

பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளி எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அறிவிக்கப்படும் என, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்தத் தடவை பல்கலைக்கழக அனுமதிக்காக 70,000க்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதாகவும், இவர்களில் 31,000க்கும் அதிகமானோரை பல்கலைக்கழகத்தில் இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் பி.எஸ்.எம். குணரத்ன குறிப்பிட்டுள்ளார். Read more

யாழில் வீதியில் சென்றுகொண்டிருந்த இளம் குடும்பப் பெண்ணொருவர் மயங்கி வீழ்ந்து மரணமடைந்த சம்பவம் நேற்று மதியம் கரணவாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் அண்ணாசிலையடி, கரணவாயைச் சேர்ந்த ஒரு பிள்ளைகளின் தாயான ஜெரோசன் தயாளினி (வயது-28) என்ற இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு மரணமடைந்துள்ளார். வீட்டில் இருந்து சைக்கிளில் நெல்லியடி நகரில் உள்ள வங்கி ஒன்றிற்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோதே மேற்படி பெண் மயங்கி விழுந்துள்ளார். Read more