கைதுசெய்யப்பட்டுள்ள குருணாகலை மருத்துவமனை மருத்துவர் சேகு சியாப்தீன் மொஹமட் சாஃபி தொடர்பான விசாரணைக்கு சுகாதார அமைச்சு விசேட குழு ஒன்றை நியமிக்க உள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள குருணாகலை போதனா மருத்துவமனையின் குறித்த மருத்துவருக்கு எதிராக இன்று மாத்திரம் 51 பெண்கள் முறைப்பாடு செய்துள்ளதாக மருத்துவமனை அதிகாரி தெரிவித்துள்ளார்.
சந்தேகத்திற்கிடமான முறையில் சொத்து சேகரித்தமை தொடர்பில், சேகு சியாப்தீன் மொஹமட் சாஃபி கடந்த 24ம் திகதி குருணாகலையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். பின் அவ் மருத்துவர் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். Read more
வடக்கு மாகாணத்தின் புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி விஜயகுனவர்த்தன தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். யாழ் காங்கேசன்துறையில் உள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அலுவலகத்தில் பொலிஸாரின் அணி வகுப்பு மரியாதையுடன் அவர் அழைத்துவரப்பட்டார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாதிகளுக்கு உதவி புரிந்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஹொரவபொத்தானை பிரதேசத்தின் அதிபர் உள்ளிட்ட 5 பேர் எதிர்வரும் 4ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் ஜ.எஸ்.ஜ.எஸ். பயங்கரவாதத்துடன் தொடர்புகொண்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இதுவரை 63 பேரைக் கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்டுள்ள குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் ஷியாப்தீன் ஷாபிக்கு எதிராக, இன்று 16 தாய்மார் முறைபாடு செய்ததாக, குருநாகல் போதனா வைத்தியசாலையின் நிறைவேற்றதிகாரி தெரிவித்துள்ளார்.
ஹோமாகம தேசிய வைத்தியசாலையில் பணிப்புரியும் வைத்தியரொருவரை, அவர் அணிந்துவந்திருந்த புர்காவை கழற்றும்படி பணித்தமையின் காரணமாக, தனது வைத்தியர் தொழிலை இராஜினாமா செய்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்றதை அடுத்து, இந்தியாவின் பிரதமராக, இரண்டாவது முறையாக, நரேந்திர மோடி, எதிர்வரும் 30ம் தேதி பதவியேற்கவுள்ளார்.
இரணைமடு பகுதியில் புகையிரதத்தில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு 8.45 மணியளவில் இரணைமடு புகையிரதக் கடவைக்கு அருகில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள், பிரித்தானியா மற்றும் பிரான்ஸில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களுக்கு இணையானவை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.