Header image alt text

பாதுகாக்கப்பட்ட வில்பத்து சரணாலயத்தை அழித்து கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ள காணிகளை மீண்டும் அரசாங்கம் கையகப்படுத்த உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்த மனுவை மீண்டும் விசாரணைக்கு எடுக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் திகதி அறிவித்துள்ளது.

இந்த மனு முன்னதாக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி மஹிந்த சமயவர்தன முன்னிலையில் விசாரிக்கப்பட்டு ஆகஸ்ட் 06ம் திகதி தீர்ப்பு வழங்கப்பட இருந்தது. எனினும் மனுவை மனுவை மீண்டும் விசாரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அது எதிர்வரும் ஜூலை 31ம் திகதி ஜனக் டி சில்வா மற்றும் நிஷ்ஷங்க பந்துல கருணாரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. Read more

குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் ஷியாப்தீன் ஷாபிக்கு எதிராக, இன்று குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பிக்குகள் உள்ளிட்ட பலர் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததுடன் குருநாகலை நகரிலுள்ள வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. Read more

தும்மலசூரிய பகுதியிலிருந்து இராணுவத்தினர் முன்னெடுத்த சோதனை நடவடிக்கைகளின் போது, சந்தேகநபர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த பகுதியிலிருந்து பெற்றோல் குண்டுகள் எட்டும், வாள்கள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.

நேற்று இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே, இவை மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் கைது செய்யப்பட்டிருந்த சந்தேகநபர்கள் 5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமானளவு பணத்தை உடன் வைத்திருந்ததாகவும் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும்போது கூடுதல் கவனம் செலுத்துமாறு பொலிசார் மக்களை எச்சரித்துள்ளனர். இது தொடர்பாக பொலிஸ் ஊடகபேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர கருத்து தெரிவிக்கையில்,

மிகவும் பழைய சம்பவங்களை சமகாலத்தில் நிகழ்ந்தவையாக சித்தரிக்கும் வகையில் அவற்றை சமூக வலைத்தளங்களில் சேர்த்துள்ள பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இனங்களுக்கு இடையில் பகையையும், குரோதத்தையும் ஏற்படுத்தும் நோக்கத்துடன் இத்தகைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. Read more