பாதுகாக்கப்பட்ட வில்பத்து சரணாலயத்தை அழித்து கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ள காணிகளை மீண்டும் அரசாங்கம் கையகப்படுத்த உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்த மனுவை மீண்டும் விசாரணைக்கு எடுக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் திகதி அறிவித்துள்ளது.

இந்த மனு முன்னதாக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி மஹிந்த சமயவர்தன முன்னிலையில் விசாரிக்கப்பட்டு ஆகஸ்ட் 06ம் திகதி தீர்ப்பு வழங்கப்பட இருந்தது. எனினும் மனுவை மனுவை மீண்டும் விசாரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அது எதிர்வரும் ஜூலை 31ம் திகதி ஜனக் டி சில்வா மற்றும் நிஷ்ஷங்க பந்துல கருணாரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.சுற்றுச்சூழல் நீதி மையம் என்ற அமைப்பினால் கடந்த 2015ல் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், பாதுகாக்கப்பட்ட வில்பத்து வனத்தை அழித்து சட்டவிரோத கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதால் சூழலுக்கு பாரியளவு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.