வவுனியா ஓமந்தை பகுதியில் நேற்று பிற்பகல் 3.10மணியளவில் கார் ஒன்று மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இவர்களில் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார். மரணடைந்தவர் முன்னாள் பாடசாலை அதிபர் வையாபுரிநாதனின் மனைவியான திலகவதி (வயது82) ஆவார். இதேவேளை காமடைந்தவர்களுள் ஒருவர் அனுராதபுரம் வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.