தமிழரசுக் கட்சியின் 16ஆவது தேசிய மாநாடு இன்று (30.06.2019) யாழ். வீரசிங்கம் மண்டபத்தின் இராசமாணிக்கம் அரங்கில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்றது.
ஆரம்ப நிகழ்வாக தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து தந்தை செல்வா சதுக்கத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து மாநாட்டு மண்டபத்தில் மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து வரவேற்புரை இடம்பெற்று, கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றன. அடுத்து, தமிழரசுக் கட்சி மாநாட்டு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு தெளிவுபடுத்தப்பட்டது. தொடர்ந்து தமிழரசுக் கட்சித் தலைவர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் விருந்தினர்களின் உரைகள் இடம்பெற்றன. Read more