தியாகி பொன். சிவகுமாரனின் 45ஆவது நினைவு நிகழ்வு 05.06.2019 புதன்கிழமை காலை 10.00மணியளவில் யாழ். உரும்பிராயில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு முன்பாக இடம்பெற்றது.

இதன்போது தியாகி சிவகுமாரனின் உருவச் சிலைக்கு அவரின் சகோதரி ஈகைச் சுடரினை ஏற்றிவைத்ததைத் தொடர்ந்து மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலர்தூபி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர்கள் எம்.கே.சிவாஜிலின்கம், விந்தன் கனகரட்ணம், பா.கஜதீபன், சி.தவராசா, ஆனந்தி சசிதரன் மற்றும் உள்ளூராட்சிசபை உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.