கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களிலிருந்து, 11இளைஞர்கள் கடத்திக் காணாமலாக்கப்பட்ட விவகாரத்தை விசாரித்த குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரியான நிஷாந்த சில்வாவை இடமாற்றம் செய்யுமாறு,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழுத்தம் கொடுத்ததாக, கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியமை தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு முன்னால் முன்னிலையாகிய நிலையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.