கனகராயன்குளம் பிரதேசத்தில் அதிசொகுசு ஜீப் வாகனமொன்று இன்றுபகல் தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளது. வாகனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

தீயினால் வாகனம் முழுவதுமாக எரிந்துள்ள நிலையில், அதில் பயணித்த எவருக்கும் பாதிப்புக்கள் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் கனகராயன்குளம் காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.