தேசிய புலனாய்வு பிரிவின் தலைமை அதிகாரியான சிசிர மென்டிஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களை விசாரிக்கும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் அவர் அண்மையில் சாட்சியமளித்திருந்தார்.

சுகாதார நிலைமை காரணமாக அவர் பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, இம்மாதம் முதலாம் திகதி முதல் அவர் தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.