காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், தமது 824ஆவது நாளில், தமது உறவுகள் எங்கே, எனக் கேட்டு பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில், போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

முல்லைத்தீவு காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகத்தின் முன்பாக இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்திற்கு, பெருமளவான பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டிற்காக ஒன்றிணைவோம் இறுதி நாள் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இன்றையதினம் முல்லைத்தீவிற்கு விஜயமொன்றினை மேற்கொண்டுள்ள நிலையில் இந்த போராட்டம் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.