முல்லைத்தீவு – மல்லாவி ஆதார வைத்தியசாலை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சிறுநீரக நோய் சிகிச்சை நிலைய கட்டிடத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று திறந்து வைத்துள்ளார்.

முல்லைத்தீவு பொது விளையாட்டரங்கில் இருந்து இலத்திரனியல் முறை மூலம் இந்த கட்டிடத்தை திறந்து வைத்துள்ளார். சுகாதாரம் போசனை மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் தேசிய சிறுநீரக நோய் நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட சிறுநீரக நோய் சிகிச்சை நிலையமே நேற்றைய தினம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.