உலக பயங்கரவாதத்துக்கு முகங்கொடுப்பதற்கு, இலங்கைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்க ஜப்பான் தயாராகவுள்ளதாக , ஜப்பானின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் டொஷிகோ அபே தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள டொஷிகோ அபே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இன்று பகல் அலரி மாளிகையில் வைத்து சந்தித்தப் போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இலங்கை, ஜப்பானுக்கிடையில் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில், இருநாடுகளும் கவனம் செலுத்துவதானது சர்வதேச மட்டத்தில் பயங்கரவாத நடவடிக்கைகள் நாட்டில் முன்னெடுக்கப்படுவதைத் தடுப்பதற்கான முக்கிய நடவடிக்கை  குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.