உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுடன் தொடர்புடைய அனைத்துக் குற்றவாளிகளுக்கும் வழங்கப்பட வேண்டியது, மரண தண்டனையாகவே அமையவேண்டும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

சஹ்ரான் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலையடுத்து, சிங்களவர்களுக்கு முஸ்லிம்கள் துரோகிகளாக மாறியள்ளனர் என, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.முஸ்லிம்களை, சிங்களவர்கள் பெரிதும் நம்பியிருந்தனர் என்றும் தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஆயுதப் போராட்டத்தின் போது,  சிங்களவர்களுக்குத் தமிழர்கள் எதிரிகளாக இருந்து வந்தனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

நாட்டில் பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டுமாயின், எதிர்க்கட்சித் ​தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கூறியதைப் போல, அனைத்து முஸ்லிம்களது வீடுகளும் பள்ளிவாயல்களும் சோதனைக்குட்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சஹரான் குழுவினரின் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் எனக் கூறப்படும் அனைத்து முஸ்லிம் அரசியல்வாதிகளும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.