இந்திய பிரதமர் நரேந்திர் மோடி இலங்கைகு மேற்கொண்ட நல்லெண்ண விஜயத்தையடுத்து 160 இந்திய படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இரு நாடுகளுக்கிடையிலான கலாசார பறிமாற்றலின் ஓர் அங்கமாக இடம்பெற்றுள்ள இந்த நிகழ்வில், இதேபோன்று 160 இலங்கை படைவீரர்களும் அவர்களது குடும்ப அங்கத்தவர்களும் இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளனர். இலங்கைக்கான இந்தியத்தூதுவர் மற்றும் இலங்கை இராணுவத்தளபதி லெப்டினென் ஜெனரல் மஹேஷ் சேனநாயக்காவும் இவர்களை வழியனுப்பிவைத்தனர். (அரசாங்க தகவல் திணைக்களம்)