இலங்கையின் முதலாவது செய்மதியான ராவணா – வன், வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்டது. இலங்கை தொழில்நுட்பவியலாளர்களால் நிர்மாணிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது செய்மதியாக இது கருதப்படுவதாக, ஆதர் சீ கிளார் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அது புவியில் இருந்து 400 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள விண்ணுக்கு, இலங்கை நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு விண்ணுக்கு செலுத்தப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.