நாட்டில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையையடுத்து கொண்டுவரப்பட்ட அவசரகாலச் சட்டம், மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிக்கப்பட்டு, இன்று (22), அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாட்டினதும் நாட்டு மக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு, பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் தேவையான அதிகாரத்தை வழங்குவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.