சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வர முயற்சித்த மூன்று பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு குவிந்தகாடு கடற்பிரதேசத்தில வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை கூறியுள்ளது. மீன்பிடி படகுமூலம் இலங்கைக்கு வந்துள்ளதுடன், கைது செய்யப்பட்ட மூன்று பேரும் வவுனியாவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்களை மேலதிக விசாரணைக்காக நெடுந்தீவு பொலிஸாரிடம் ஒப்படைத்ததாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.