விழிநீர் அஞ்சலி – அமரர் ராமலிங்கஐயர் செல்லையா வல்லிபுரம் அவர்கள்-

வவுனியா ஓமந்தை பன்றிக்கெய்தகுளத்தை பிறப்பிடமாகவும், வவுனியா கோயில்புதுக்குளத்தை வாழ்விடமாகவும் கொண்ட ராமலிங்கஐயர் செல்லையா வல்லிபுரம் அவர்கள் நேற்று (28.06.2019) இயற்கை எய்தினார் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் கழகத்தின் சிரேஸ்ட உறுப்பினர் அமரர் தோழர் வல்லிபுரம் உதயகுமாரசிங்கம் (கிளியன்) அவர்களின் அன்புத் தந்தையாவார். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்துகொண்டு, எமது அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF) 

(அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை காலை 10.மணியளவில் கோயில்புதுக்குளத்தில் இடம்பெறவுள்ளது.)