யாழ். மானிப்பாய் ஐந்தாம் கட்டை ஒழுங்கைக்கான புனரமைப்புப் பணிகள் நேற்றையதினம் (29.06.2019) ஆரம்பித்து வைக்கப்பட்டன. மேற்படி பள்ளமான வீதிக்கு தார் மற்றும் சீமெந்து போடப்படுகின்றது.

நீண்டகாலமாக இப்பாதை வெள்ளவாய்க்காலாய் இருந்தமையால் மழை காலங்களில் இப்பகுதி மக்களின் போக்குவரத்துக்கு மிகவும் சிரமமாக இருந்தது. இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி விசேட நிதியான 15லட்சம் ரூபாய் மூலம் மேற்படி வீதிக்கான புனரமைப்புப் பணிகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.நேற்றுமாலை 3.30மணியளவில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் கௌரிகாந்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலி தென்மேற்கு பிரதேசசபையின் உபதவிசாளர் கணேசவேல், முன்னாள் ஆசிரியர் செல்வராஜா மற்றும்இ பயனாளிகள், ஊர்மக்கள், நலன்விரும்பிகள் என பலர் கலந்துகொண்டிருந்தார்கள்.