Header image alt text

இலங்கையின் முதலாவது செய்மதியான ராவணா – வன், வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்டது. இலங்கை தொழில்நுட்பவியலாளர்களால் நிர்மாணிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது செய்மதியாக இது கருதப்படுவதாக, ஆதர் சீ கிளார் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அது புவியில் இருந்து 400 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள விண்ணுக்கு, இலங்கை நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு விண்ணுக்கு செலுத்தப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பலாங்கொடை – பெலிஹ_ல்ஓயா பிரதேசத்திலுள்ள ஹோட்டலொன்றில் இடம்பெற்ற பேஸ்புக் பயனாளிகள் சிலரின் சட்டவிரோத போதைப் பொருள் வர்த்தக நடவடிக்கைகளின் போது, 51 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கலால் திணைக்கள அதிகாரிகள் இணைந்து நேற்று முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போதே, குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 160 மி.கி ஹெரோய்ன், 300 மி.கி கொக்கெய்ன், 50 மி.கி ஐஸ் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதுடன், Read more

மின்னல் தாக்கியதில் விவசாயியொருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர். செங்கலடி சந்தை வீதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி ஆனந்தன் (வயது 40) என்பவரே மின்னல் தாக்கத்தில் உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை 5.30 மணியளவில் மட்டக்களப்பு – பதுளை வீதியை அண்டிய பங்குடாவெளி – பெரியவெட்டை எனும் வயல் பிரதேசத்தில் வேலை செய்து கொண்டிருந்த குறித்த விவசாயி, மின்னல் தாக்கத்துக்குள்ளாகி ஸ்தலத்திலேயே உயிரழந்துள்ளார். Read more

நியூசிலாந்து நாட்டில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் மக்கள் அதிகம் வசிக்காத கெர்மடெக் தீவு பகுதிகளில் இருந்து வடக்கே ஏற்பட்டுள்ளது.

கடலோர பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற்படுத்தும் அளவில் சுனாமி அலைகள் இருக்கும் என முதலில் எச்சரிக்கை விடப்பட்டது. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டது. Read more

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளடிமிர் புட்டினுக்குமிடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது.

தஜிகிஸ்தான், துஷன்பே மாநாட்டு மண்டபத்தில் ஆசியாவின் கூட்டுச்செயற்பாடு மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் பற்றிய அமைப்பின் ஐந்தாவது மாநாட்டில் கலந்துகொண்டபோதே இச்சந்திப்பு இடம்பெற்றது. Read more

இந்திய பிரதமர் நரேந்திர் மோடி இலங்கைகு மேற்கொண்ட நல்லெண்ண விஜயத்தையடுத்து 160 இந்திய படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இரு நாடுகளுக்கிடையிலான கலாசார பறிமாற்றலின் ஓர் அங்கமாக இடம்பெற்றுள்ள இந்த நிகழ்வில், இதேபோன்று 160 இலங்கை படைவீரர்களும் அவர்களது குடும்ப அங்கத்தவர்களும் இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளனர். Read more

இலங்கை தொழில்நுட்பவியலாளர்களால் நிர்மாணிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது செய்மதியாக இது கருதப்படுவதாக ஆதர் சீ கிளார் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அது புவியில் இருந்து 400 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள விண்ணுக்கு இலங்கை நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு விண்ணுக்கு செலுத்தப்படவுள்ளது. Read more

அம்பாறை காரைதீவு பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இருவர் மீது மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

படுகாயமடைந்தவர் ஆபத்தான நிலையில் காரைதீவு வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். Read more

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுடன் தொடர்புடைய மொஹமட் மில்ஹான் என்ற நபர் தங்களது சிவப்பு அறிவித்தலுக்கு அமையவே சவுதியின் ஜித்தாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் என சர்வதேச காவல்துறையான இண்டர்போல் தெரிவித்துள்ளது.  இண்டர்போல் இணைத்தளத்தில் அதன் செயலாளர் நாயகம் ஜுகன் ஸ்டொக்கால் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மொஹமட் மில்ஹான் உட்பட சந்தேகநபர்கள் நான்கு பேர் சவுதியின் ஜித்தாவில் வைத்து கைது செய்யபபட்டு, இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர் என்று இண்டர்போல் இணைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது. Read more

இந்த மாத இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோவுடன், பயங்கரவாத முறியடிப்பு பற்றி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், ஐக்கிய அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோவுடன், பயங்கரவாத முறியடிப்பு குறித்து, பிரதமர் கலந்துரையாடியிருந்தார் என்றும் இலங்கைக்கு வருவது குறித்து அவர் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. Read more