மட்டக்களப்பு சீயோன் தேவலாயத்தில், உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தற்கொலை குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதியின் சடலத்தைப் புதைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று (15), ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பாரதி வீதியிலுள்ள மயானத்தில், குறித்த பயங்கரவாதியின் சடலத்தைப் புதைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் இதையடுத்து, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. Read more





உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹசீமுடன் முகப்புத்தகம் ஊடாக தொடர்பு வைத்திருந்த நபர் ஒருவர் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் ISIS அமைப்புடன் தொடர்புடையவர் என தகவல்கள் தெரியவந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 32 வயதுடைய மொஹமட் அசாருதீன் எனும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவருடன தொடர்புடைய 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உலக அமைதி சுட்டெண் தரவரிசையில், இலங்கை பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது.
உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்றத் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 254 ஆக அதிகரித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, தஜிகிஸ்தானுக்கு இன்று (13) காலை 10:45க்கு பயணமானார்.