Header image alt text

யாழ். கந்தரோடை ஆறுமுகம் வீதிக்கான அபிவிருத்திப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (01.07.2019) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி விசேட நிதியான 20 லட்சம் ரூபாயில் மேற்படி வீதி அபிவிருத்தி செய்யப்படுகின்றது. இன்றைய அடிக்கல் நாட்டும் வைபவத்தில் புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலிதெற்கு பிரதேசசபை தவிசாளர் தர்சன், வலிதெற்கு பிரதேசசபை உறுப்பினர் திருமதி யோகாதேவி ரவிக்குமார், வலி வடக்கு பிரதேசசபை உறுப்பினர் சபேசன், வலி தென்மேற்கு பிரதேசசபை உப தவிசாளர் கணேசவேல், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் யுகராஜ், ஓய்வுபெற்ற அதிபர் செல்வக்குமார், ஊர்ப் பெரியோர்கள், இளைஞர்கள் மற்றும் பயனாளிகள் கலந்துகொண்டிருந்தார்கள்.
Read more

யாழ். கந்தரோடை ஞானவைரவர் வீதிக்கான அபிவிருத்திப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று (01.07.2019) மாலை 5மணியளவில் நடைபெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி விசேட நிதியான 6லட்சம் ரூபாயில் மேற்படி வீதி அபிவிருத்தி செய்யப்படுகின்றது. இன்றைய அடிக்கல் நாட்டும் வைபவத்தில் புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலிதெற்கு பிரதேசசபை தவிசாளர் தர்சன், வலிதெற்கு பிரதேசசபை உறுப்பினர் திருமதி யோகாதேவி ரவிக்குமார், வலி தென்மேற்கு பிரதேசசபை உப தவிசாளர் கணேசவேல், பாராளுமன்ற உறுப்பனரின் இணைப்பாளர் யுகராஜ், ஓய்வுபெற்ற அதிபர் செல்வக்குமார், தனஞ்சயன், ஊர்ப் பெரியோர்கள் மற்றும் பயனாளிகள் கலந்துகொண்டிருந்தார்கள்.
Read more

தந்தை செல்வா கலையரங்க திறப்புவிழா நிகழ்வு இன்று (01.07.2019) திங்கட்கிழமை முற்பகல் 10மணியளவில் யாழ். ராஜேந்திரபிரசாத் வீதியில் அமைந்துள்ள யாழ். மத்திய கல்லூரிக்கு அருகாமையில் இடம்பெற்றது.

மேற்படி கலையரங்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் அவர்களால் இன்றுமுற்பகல் திறந்துவைக்கப்பட்டது. மேற்படி திறப்புவிழா நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, முனைவர் அருகோபாலன், தமிழரசுக் கட்சியின் நிர்வாக உறுப்பினர்கள், அங்கத்தவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் Read more

யாழ். இணுவில் கந்தசுவாமி கோவிலுக்கான சுற்றுவீதி (கார்ப்பெட்) அமைக்கும் வேலைகள் இன்று (01.07.2019) காலை ஆரம்பித்து வைக்கப்பட்டன. நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட விசேட நிதியான 02கோடியே 80லட்சம் ரூபாயில் மேற்படி கார்பெட் வீதி அமைக்கப்படுகின்றது.

புதிய சுற்று வீதிக்கான வேலைகளை ஆரம்பிப்பதற்காக இன்று நடைபெற்ற அடிக்கல் நாட்டும் வைபவத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், கலாநிதி ஆறுதிருமுருகன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், கோப்பாய் பிரதேசசபை உறுப்பினர் இ.செல்வராஜா மற்றும் ஆலய குருக்கள், ஆலய பரிபாலன சபையினர், நலன்விரும்பிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
Read more

யாழ். ஏழாலை தெற்கு மயிலங்காடு அரசடியம்மன் வீதிக்கான புனரமைப்பு வேலைகள் நேற்று (30.06.2019) மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி விசேட நிதியான 20லட்சம் ரூபாயில் மேற்படி வீதி புனரமைப்புச் செய்யப்படவுள்ளது. நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், பிரதேச சபை உறுப்பினர் அபராசுதன், முன்னாள் நகரசபை உறுப்பினர் கிசோர், இளைஞர்கள் மற்றும் பயனாளிகள் கலந்துகொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. Read more

யாழ். அரியாலை சக்தி கலாச்சார அபிவிருத்தி மன்றத்தின் 17ஆவது ஆண்டு நிறைவு விழா நேற்று (30.06.2019) மாலை 4.00மணியளவில் நல்லூர் திவ்ய ஜீவன மண்டபத்தில் மன்றத்தின் தலைவர் செல்வி சனுஜா இராசேந்திரம் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வின் முதன்மை விருந்தினராக புளொட் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்துகொண்டிருந்தார். சிறப்பு விருந்தினராக சர்வதேச இந்துமதகுருமார் ஒன்றியத்தலைவர் கலாநிதி து.கு. ஜெகதீஸ்வரக்குருக்கள் கலந்துகொண்டு ஆசியுரையினை வழங்கியிருந்தார். மேலும் சிறப்பு விருந்தினராக த.தனதீசன் (சுடர்நிலா புத்தகசாலை) கலந்துகொண்டிருந்ததோடு, Read more