யாழ். கந்தரோடை ஆறுமுகம் வீதிக்கான அபிவிருத்திப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (01.07.2019) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி விசேட நிதியான 20 லட்சம் ரூபாயில் மேற்படி வீதி அபிவிருத்தி செய்யப்படுகின்றது. இன்றைய அடிக்கல் நாட்டும் வைபவத்தில் புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலிதெற்கு பிரதேசசபை தவிசாளர் தர்சன், வலிதெற்கு பிரதேசசபை உறுப்பினர் திருமதி யோகாதேவி ரவிக்குமார், வலி வடக்கு பிரதேசசபை உறுப்பினர் சபேசன், வலி தென்மேற்கு பிரதேசசபை உப தவிசாளர் கணேசவேல், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் யுகராஜ், ஓய்வுபெற்ற அதிபர் செல்வக்குமார், ஊர்ப் பெரியோர்கள், இளைஞர்கள் மற்றும் பயனாளிகள் கலந்துகொண்டிருந்தார்கள்.