Header image alt text

யாழ். சாவகச்சேரி மகளீர் கல்லூரியில் தகவல் தொழில்நுட்படத்துடன் கூடிய திட்டத்திற்குரிய திறன் வகுப்பறையை (Smart Classroom) மேம்படுத்தும் பணிகளுக்கு, சுவிஸ் நாட்டில் வதியும் புளொட் உறுப்பினர் சி.சில்வபாலன் (லெனின்) அவர்கள் ரூபாய் 120.000/- நிதியினை வழங்கியிருந்தார்.

அதிபர் லலிதா முகுந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிதி வழங்கும் நிகழ்வில் உதவிக் கல்விப் பணிப்பாளர் சிவத்திரை சிவநாதன், கோட்டக்கல்வி அதிகாரி திரு. நடராஜா ஒய்வுநிலை ஆசிரிய ஆலோசகருடன், முன்னாள் மாகாணசபை உறுப்பினரும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)இன் யாழ். மாவட்ட அமைப்பாளருமான பா.கஜதீபனும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Read more

யாழ். மானிப்பாய் இந்துக் கல்லூரியின் நிறுவுனர் தினமும், பரிசளிப்பு விழாவும்-2019 நிகழ்வு 04.07.2019 வியாழக்கிழமை காலை 9மணியளவில் கல்லூரி பிரதான மண்டபத்தில் கல்லூரியின் அதிபர் எஸ். இந்திரகுமார் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக யாழ். தொழில்நுட்பக் கல்லூரி இயக்குநர் சுப்பிரமணியம் முகுந்தன் அவர்களம், கௌரவ விருந்தினர்களாக கல்லூரியின் பழைய மாணவர்களான திருமதி ரஜினி கருணாகரன், ராஜரட்ணம் சாந்தன் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தார்கள். Read more

இந்துபோர்ட் சு.இராசரத்தினம் அவர்களின் 135ஆவது பிறந்தநாள் விழாவும், பரிசளிப்பும்-2019 நிகழ்வு 04.07.2019 வியாழக்கிழமை பிற்பகல் 3மணியளவில் யாழ். திருநெல்வேலி சைவ வித்தியா விருத்திச் சங்க ஆராதனை மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் சோ. பத்மநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வின் முதன்மை விருந்தினராக புளொட் தலைவரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக வடமாகாண சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர் திருமதி வனஜா செல்வரத்தினரம் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்கள். Read more