யாழ். மானிப்பாய் முகாந்தரம் அவினியூவின் அபிவிருத்திப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (13.07.2019) காலை 9.00 மணியளவில் இடம்பெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி விசேட நிதியினூடாக இவ் வீதி அபிவிருத்தி செய்யப்படுகின்றது. இன்றைய அடிக்கல் நாட்டும் வைபவத்தில் புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலிதென்மேற்கு பிரதேசசபை தவிசாளர் ஜெபநேசன், கோப்பாய் பிரதேசசபை உறுப்பினர் இ.செல்வராஜா, மாகாணக் கல்வித் திணைக்கள ஆவணப்பகுதி லயன் சிவசங்கர், லயன் சுந்திரரேஸ்வரன் ஆகியோரும், ஊர்ப் பெரியோர்கள், இளைஞர்கள் மற்றும் பயனாளிகளும் கலந்துகொண்டிருந்தார்கள்.