கடந்த 11.07.2019 வியாழக்கிழமை காலமான திருமதி ஜோசப்பின் வேதநாயகம் (குலம் அக்கா) அவர்களின் பூதவுடல் யாழ். டேவிட் வீதியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் இன்றுகாலை 9மணியளவில் அமரர் திருமதி ஜோசப்பின் வேதநாயகம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் கள செயற்பாட்டாளராகவும், போராட்டத் தலைவர்களின் பாதுகாவலராகவும் இருந்த திருமதி ஜோசப்பின் வேதநாயகம் (குலம் அக்கா) அவர்கள் ஒடுக்குமுறைகளுக்கெதிரான பல்வேறு போராட்டங்களில் துணிச்சலுடன் பங்கெடுத்தவர். இவர் வடக்கு கிழக்கு முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் அவர்களின் மாமியாராவார்.