Header image alt text

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆண்டுதோறும் அனுஸ்டித்துவரும் வீரமக்கள் தினத்தின் இறுதிநாள் நிகழ்வு இன்று (16.07.2019) செவ்வாய்க்கிழமை மாலை 4.30அளவில் வவுனியா கோயில்குளத்தில் அமைந்துள்ள அமரர் உமாமகேஸ்வரன் இல்லத்தில் கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும், வவுனியா மாவட்ட அமைப்பாளரும், வவுனியா நகரசபை உறுப்பினருமான கனகரட்ணம் சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களின் தலைமையில் நடைபெற்றது. Read more

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் மத்தியகுழுக் கூட்டம் கட்சியின் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களது தலைமையில் இன்று (16.07.2019) பிற்பகல் 2.00 மணிமுதல் பிற்பகல் 4.00 மணிவரை வவுனியாவில் நடைபெற்றது.

இதன்போது கட்சியின் இன்றைய அரசியல் நிலைமைகள், எதிர்கால செயற்பாடுகள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள், எதிர்வரும் தேர்தல்கள் என்பன குறித்து கட்சியின் தலைவர் த.சித்தார்த்தன் அவர்கள் விளக்கிக் கூறினார். இதன்போது கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சியின் மத்தியகுழு உறுப்பினர்கள் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டார்கள். மேற்படி கூட்டத்தில் கட்சியின் தலைவர் த.சித்தார்த்தன், செயலாளர் சு.சதானந்தம், பொருளாளர் க.சிவநேசன், உப தலைவர்கள் ஜி.ரி. லிங்கநாதன், பொ.செல்லத்துரை மற்றும் வடக்கு கிழக்கின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கட்சியின் மாவட்ட அமைப்பாளர்களும், கட்சியின் மத்தியகுழு உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.
Read more

யாழ். கோப்பாய் ஊறணி குடியிருப்பு வீதி நேற்று (15.07.2019) மாலை 5.30மணியளவில் திறந்துவைக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி விசேட நிதியினூடாக இவ் வீதி அபிவிருத்தி செய்யப்பட்டு நேற்று திறந்துவைக்கப்பட்டது.

நேற்றைய வைபவத்தில் புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலிதெற்கு பிரதேசசபை தவிசாளர் தர்சன், வலி கிழக்கு பிரதேசசபை உறுப்பினர்கள் இ.செல்வராஜா, சி.அகீபன், முன்னாள் நகரசபை உறுப்பினர் கிசோர், சமுர்த்தி உத்தியோகத்தர், ஊர்ப் பெரியோர்கள் மற்றும் பயனாளிகள் கலந்துகொண்டிருந்தார்கள்.
Read more

யாழ். சுன்னாகம் முடவேம்படி வீதியின் அபிவிருத்திப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்றுமாலை (15.07.2019) 5.00மணியளவில் இடம்பெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி விசேட நிதியினூடாக இவ் வீதி அபிவிருத்தி செய்யப்படுகின்றது. நேற்றைய அடிக்கல் நாட்டும் வைபவத்தில் புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலிதெற்கு பிரதேசசபை தவிசாளர் தர்சன், பிரதேச சபை உறுப்பினர் சுரேஸ்குமார், முன்னாள் நகரசபை உறுப்பினர் கிசோர், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் யுகராஜ், சுன்னாகம் கிராம சக்தி அமைப்பின் தலைவர் நவரட்ணம், ஊர்ப் பெரியோர்கள் மற்றும் பயனாளிகளும் கலந்துகொண்டிருந்தனர். Read more