விழிநீர் அஞ்சலி!

திருகோணமலை மூதூர் கங்குவேலியை பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்ட அழகுராஜா அன்னப்பிள்ளை அவர்கள் இன்று (18.07.2019) வியாழக்கிழமை காலமானார் என்பதை மிகவும் துயருடன் அறியத்தருகின்றோம். அன்னார் கழக உறுப்பினர் தோழர் உமாபதி அவர்களின் தாயாராவார்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்துகொண்டு, எமது அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)