யாழ். மானிப்பாய் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவும், நூல் வெளியீட்டு நிகழ்வும் இன்று (19.07.2019) வெள்ளிக்கிழமை நண்பகல் 1.30மணியளவில் கல்லூரி மண்டபத்தில் கல்லூரியின் முதல்வர் திருமதி நர்மதா பரமேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்துகொண்டிருந்தார். ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவித்து மாணவிகளின் பாண்ட் வாத்திய இசையோடு அழைத்துவரப்பட்டு, மங்கல விளக்கேற்றல், இறைவணக்கம், தேசியக் கொடியேற்றல், பாடசாலைக் கொடியேற்றல் என்பன இடம்பெற்றன. Read more