Header image alt text

யாழ். நீர்வேலி வடக்கு பன்னாலை சிவசக்தி முன்பள்ளி சிறார்களின் வருடாந்த விளையாட்டு விழா-2019 நிகழ்வானது இன்று (20.07.2019) சனிக்கிழமை பிற்பகல் 1.30மணியளவில் சிவசக்தி சனசமூக நிலையத் தலைவர் கு.சுரேஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார். சிறப்பு விருந்தினர்களாக கு.ரவிச்சந்திரன் (அதிபர் யா.அத்தியார் இந்துக் கல்லூரி நீர்வேலி), சி.தர்மரட்ணம் (அதிபர் யா. நீர்வேலி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை), பா.பிறேமசியா (கிராம சேவையாளர், நீர்வேலி வடக்கு), ம.சுதர்சன் (வாழ்வின் எழுச்சி உத்தியோகத்தர் நீர்வேலி வடக்கு), இ.சுகிர்தன் (பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், நீர்வேலி வடக்கு) ஆகியோரும், கௌரவ விருந்தினர்களாக இ.செல்வராசா (ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் மத்தியகுழு உறுப்பினரும், வலிகிழக்கு பிரதேசசபை உறுப்பினரும்), Read more

புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுக்கும் உடுவில் பிரதேச செயலாளர் ஜெயகாந்தன், பிரதேச செயலக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் ஆகியோர்க்குமிடையேயான விசேட கூட்டம் ஒன்று இன்றுமுற்பகல் உடுவில் பிரதேச செயலக மகாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

பிரதேச செயலாளரின் தலைமையில் நடைபெற்ற இச் சந்திப்பில் வலிதெற்கு பிரதேசசபை தவிசாளர் தர்சன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள். இதன்போது கிராம எழுச்சித் திட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் நிதியொதுக்கீட்டில் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும் அது தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
Read more

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சிவசிதம்பரம் அவர்களின் 96ஆவது ஜனன தின நிகழ்வு யாழ். நெல்லியடி பஸ் தரிப்பிடப் பகுதியில் அமைந்துள்ள அன்னாரின் உருவச் சிலைக்கு முன்பாக இன்று (20.07.2019) சனிக்கிழமை காலை நடைபெற்றது.

இந் நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ. சுமந்திரன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான எம்.கே. சிவாஜிலிங்கம், பா.கஜதீபன், தர்மலிங்கம், சிவயோகன், சுகிர்தன், கரவெட்டி அபிவிருத்தி ஒன்றிய தலைவர் உபாலி பொன்னம்பலம், உபதலைவர் ராகவன், போசகர் செல்வரட்ணம் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், கல்விச் சமூகத்தினர் கலந்து கொண்டிருந்தார்கள்.
Read more