தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிரை ஈந்த கழகக் கண்மணிகள், தலைவர்கள், அனைத்து இயக்க போராளிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் நினைவுகூரும் வகையில் பிரான்ஸில் இன்று அஞ்சலி நிகழ்வொன்று நடைபெற்றது.

இன்று 21.07.2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00மணியளவில் பிரான்ஸின் 21 Rue Villot, 93120 la courneuve என்னுமிடத்தில் தோழர் கந்தசாமி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கழகத்தின் பிரான்ஸ் கிளை இணைப்பாளர் தோழர் மார்டடீன் பெர்ணான்டோ உள்ளிட்ட கழகத் தோழர்கள் மற்றும் ஆதரவாளர்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.