யாழ். ஏழாலை மேற்கு இலங்கையர்கோன் வீதியின் அபிவிருத்திப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்றுமாலை (20.07.2019) 6.15மணியளவில் இடம்பெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி விசேட நிதியினூடாக இவ் வீதி அபிவிருத்தி செய்யப்படுகின்றது. நேற்றைய அடிக்கல் நாட்டும் வைபவத்தில் வலி தெற்கு பிரதேச சபை தவிசாளர் தர்சன், முன்னாள் கிராம சேவையாளர் ஞானசபேசன், சமூக சேவையாளர் சிவா மற்றும் ஊர்ப் பெரியோர்கள் கலந்துகொண்டனர்.