யாழ். கோப்பாய் வடக்கு முதியோர் சங்கத்தின் மாதாந்த ஒன்றுகூடல் நிகழ்வு சங்கத்தின் தலைவர் தெய்வேந்திரம் அவர்களின் தலைமையில் நேற்று (21.07.2019) பகல் இடம்பெற்றது.

நிகழ்வில் புளொட் தலைவரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்ததோடு, சிறப்பு விருந்தினராக வலிகிழக்கு பிரதேசசபை உறுப்பினர் இ.செல்வராஜா அவர்கள் கலந்து கொண்டிருந்தார். இவ் ஒன்றுகூடலில் கோப்பாய் வடக்கு கிராம சேவையாளர் சண்முகவடிவேல், கோப்பாய் வடக்கு முதியோர் சங்க செயலாளர் கனகலிங்கம், சங்கத்தின் உபதலைவர் சோதிலிங்கம், சங்கத்தின் பொருளாளர் அருணகிரிநாதன்; அபிவிருத்தி உத்தியோகத்தர் சிவகுமார் மற்றும் முதியோர்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.