யாழ். உடுவில் அம்மன்கோவில் வீதியின் அபிவிருத்திப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்றுமாலை (21.07.2019) 5.30மணியளவில் ஆசிரியர் திலீபன் தலைமையில் நடைபெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி விசேட நிதியினூடாக இவ் வீதி அபிவிருத்தி செய்யப்படுகின்றது. அடிக்கல் நாட்டும் வைபவத்தில் புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலிதெற்கு பிரதேசசபை உறுப்பினர் திருமதி யோகாதேவி ரவிக்குமார், அம்மன் தேவஸ்தான பிரதம குரு, பிரதேச சபை உறுப்பினர் துவாகரன், இணைப்பாளர் சசி, கிராம சேவையாளர் மயூரன், சனசமூக நிலைய தலைவர் டினேஸ், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் ர.யுகராஜ் மற்றும் ஊர்ப் பெரியோர்களும், பயனாளிகளும் கலந்துகொண்டிருந்தனர்.