வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட காந்தீயம் அமைப்பின் செயலாளர் வைத்தியர் சோமசுந்தரம் இராஜசுந்தரம் அவர்களுக்கும் ஏனைய இனப்பற்றாளர்களுக்குமான அஞ்சலி நிகழ்வு இன்று மாலை 4.30அளவில் நடைபெற்றது.

வவுனியா கோயில்குளம் அமரா் உமாமகேஸ்வரன் அவர்களின் ஞாபகார்த்த பொதுநூலகத்தில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் மத்தியகுழு உறுப்பினரும் வவுனியா மாவட்ட அமைப்பாளரும் வவுனியா நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம்,(மோகன்) அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நகழ்வில் வைத்தியர் அமரா் இராஜசுந்தரம் அவர்களின் உருவப்படத்திற்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து நினைவுச்சுடர் ஏற்றல் இடம்பெற்றதையடுத்து அஞ்சலி உரைகள் இடம்பற்றன. கட்சியின் நகரசபை உறுப்பினர் சு.காண்டீபன் நன்றியுரையாற்றினார். நிகழ்வில் காந்தீயம் அமைப்பின் முன்னாள் நிர்வாக செயலாளர் திரு. கணபதிப்பிள்ளை, திரு. கண்ணகி தேவராஜா, திரு.கந்தசாமி, ஓய்வுநிலை அதிபர் சிவசோதி, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் பொருளாளர் க.சிவநேசன், உபதலைவர் ஜி்ரி்.லிங்கநாதன், தேசிய அமைப்பாளர் க.தவராஜா, நிர்வாக செயலர் ம.பத்மநாதன், திரு. சேனாதிராசா உள்ளிட்ட நகரசபை உறுப்பினர்கள், பிரதேசசபை உறுப்பினர்கள், கட்சியின் மத்தியகுழு உறுப்பினர்கள், கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டார்கள்.