தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரானின் உறவினர் ஒருவர் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். முகமட் அப்துல் காதர் என்பவரே இவ்வாறு கட்டுபொத்த பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட நபர் சஹ்ரானின் மனைவியின் மூத்த சகோதரர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவர் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரானுடன் நுவரெலியாவில் ஆயுத பயிற்சி பெற்றவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட நபர் குறித்து கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.