யாழ். உடுவில் ஞானவைரவர் ஆலய புனரமைப்பு வேலைகள் இன்றுகாலை .10.00 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி விசேட நிதியினூடாக இவ் ஆலயம் புனரமைப்பு செய்யப்படுகின்றது.

இன்றைய நிகழ்வில் புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலிதெற்கு பிரதேசசபை தவிசாளர் தர்சன், பிரதேச சபை உறுப்பினர் யோகாதேவி ரவிக்குமார், பிரதேச சபை உறுப்பினர் துவாரகன், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் யுகராஜ் , ஊர்ப் பெரியோர்கள் மற்றும் ஊர்மக்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.