முல்லைத்தீவு, சிலாவத்தை பகுதியில் வீதியை விட்டு விலகிய கூலர் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இன்று காலை கொக்குளாய், முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்தவர்களின் கூலர் வாகனம் ஐஸ் ஏற்றுவதற்காக சிலாவத்தை நோக்கி பயணித்தபோது வீதியை விட்டு விலகி தொலைத்தொடர்பு கம்பம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் வாகனத்தின் சாரதி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன் அவருடன் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளார். முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.