யாழ். இணுவில் பாலாவோடை வீதியின் அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி விசேட நிதியினூடாக இவ் வீதி அபிவிருத்தி செய்யப்படுகின்றது.

அடிக்கல் நாட்டும் வைபவத்தில் புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலிதெற்கு பிரதேசசபை தவிசாளர் தர்சன், வலிதெற்கு பிரதேச சபை உறுப்பினர்கள், ஊர்ப் பெரியோர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டிருந்தார்கள்.