முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு யங்ஸ்டார் இளைஞர் கழகத்திற்கு ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் ஜேர்மன் தோழர்கள் 10,000ரூபா நிதியுதவியை வழங்கியுள்ளனர்.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் மத்தியகுழு உறுப்பினரும், முன்னாள் வட மாகாண விவசாய அமைச்சருமான கந்தையா சிவநேசன் அவர்களின் ஒழுங்கமைப்பில் வழங்கப்பட்ட மேற்படி நிதியினை இளைஞர் கழக நிரவாகி தனுசனிடம் கட்சியின் அங்கத்தவர் நகுலன் கையளித்திருந்தார்.