அம்பாறை மாவட்டம் பொத்துவில் களப்புக்கட்டு பகுதியில் மீனவரின் வலையில் 81 மி.மீட்டர் ரக மோட்டார் செல் குண்டுகள் சிக்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. 
நேற்று (25) மாலை அப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவரின் வலையில் குறித்த மோட்டார் குண்டுகள் சிக்கியுள்ளன .

கருப்பு நிற பொலித்தீன் பை ஒன்றில் சுற்றி கட்டப்பட்டிருத்த நிலையில் குறித்த 3 குண்டுகளும் மீட்கப்பட்டது.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.